| வரலாறு 8 முதல் ஊதியக்குழு |
| 1960 ல் முதல் ஊதிய ஆணைக்குழு அமைக்கப்பட்டது .அது அரசு ஊழியர்களின் |
| ஊதிய விகிதங்களை மட்டுமே மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. |
| இதைக்கண்ட நமது இயக்கம். 1960 ஜனவரியில் கடலுரில் 4 வது மாநாட்டை |
| நடத்தியது.பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் திரண்டனர். அதுவரை அந்நகரம் |
| கண்டிராத மாபெரும் ஊர்வலம் .அதைக்கண்ட அன்றைய கல்வி அமைச்சர் |
| சி.சுப்பிரமணியம் மேடையிலேயே ஆசிரியர்கள் ஊதியத்தை முதல் |
| ஊதியக்குழு பரிசிலனை செய்து புதிய ஊதியத்தை அறிவிக்கும் என்று அறிவித்தார் |
| அக்கூட்டத்தில் இராமையத்தேவரின் தலைமை உரை இத்தகைய அறிவிப்புக்கு |
| காரணமாக அமைந்தது. |
| கல்வித்துறை சார் பணியாளர்களுக்கு அப்போதெல்லாம் அங்கீகாரம் பெற்ற |
| தனிச்சங்கம் இல்லை .அங்கீகாரம் பெறாததால் அச்சங்கம் என்.ஜி.ஓ யூனியனுடன் |
| இணைப்புச்சங்கமாக செயல்பட்டது, நமது இயக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் |
| அதிகம் . என்.ஜி.ஓ. வில் கீழ்நிலை எழுத்தர் பின்னர் இளநிலை எழுத்தர் என்றும் பெயர் மாற்றப்பட்ட பணியாளர்கள் எண்ணிகை அதிகம். |
| இதில் எழுத்தர்கள் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெற்றவர்கள் |
| ஆசிரியர்கள் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெற்று இரண்டாண்டு பட்டயப்படிப்பு |
| படித்தவர்கள் . |
| 1960க்கு முன் இளநிலை எழுத்தருக்கு அடிப்படை ஊதியம் ரூ 45/- |
| இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 40/- |
| தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 37/- |
| நியாய அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் 2 ஆண்டு பட்டய படிப்புக்கு |
| கூடுதல் ஊதியம் தரவேண்டும். ஆனால் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. |
| முதல் ஊதியக்குழுவில் இந்த பிரச்சணையை இயக்கம் முன்நிறுத்தி அறிகை தந்து |
| வாதிட்டது. அதேப்போல் ஒவ்வோர் நிர்வாகத்திலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும். வெவ்வேறு ஊதிய விகிதம் இருப்பதை மாற்றி ஒரேகல்வித் |
| தகுதிஉடைய ஆசிரியர்களுக்கு ஒத்த ஊதியம் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியது. |
| இந்த இரண்டு கருத்தாலும் என்.ஜி.ஓ யுனியன் முரண்பட்டு நின்றது. பழைய நிலையே இருக்க வேண்டும் என்பது அவர்களின் நிலையாகும். |
| ஆனால் இயக்கத்தின் வாதத்தை ஊதிய ஆணைக்குழு நியாம் என்று ஏற்றுகொண்டது |
Tuesday, 5 February 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment