Sunday, 24 February 2013

சுவாமி விவேகானந்தரின் 150  பிறந்த ஆண்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பில்
இளைஞர் எழுச்சி  கருத்தரங்கம் நடைபெற்றது.

வரவேற்பு செந்தில் குமார்

நான் (வட்டாரச்செயலர் )
மாவட்ட துணைச்செயலர் திரு அருன் பிரகாஷ் அவர்கள்
மாவட்டத்தலைவர் பழனிச்சாமி அவர்கள்
அருட்தந்தை ஜான்பாஸ்கோ அவர்கள்






உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சம்பத் அவர்கள்

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்



காவேரிப்பட்டிணம் சின்ராஜ்அவர்கள்

நகராட்சி பாலாஜி அவர்கள்



நன்றி திருமதி பானுமதி அவர்கள்
சுவாமி விவேகானந்தரின் 150  பிறந்த ஆண்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பில்
இளைஞர் எழுச்சி  கருத்தரங்கம் நடைபெற்றது.

திரு செந்தில் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்


 இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தலைமையுரை


 மாவட்ட துணை செயலாளர் அருன் பிரகாஷ்  அவர்கள்

 மாவட்ட கல்விஅலுவலர் (முன்னால்) உரை





 அரங்க அமைப்பு


 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்


 காவேரிப்பட்டிணம் துணை செயலளர்






Thursday, 7 February 2013


வரலாறு 8    இயக்கத்தின்  மறுமலர்ச்சியும் காரணமான காமராசரும்.

 1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது.(தற்போதய  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்_அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார். அப்போது சட்டென்று தொடக்கப்பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம் காமராஜர் விசாரித்தார். "தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார். மேலும் கொஞ்சம் விவரங்களை கேட்ட மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அவர் கூறியதாவது:_ "தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும். பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும். இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்." என்று காமராஜர் கூறினார். பின்னரே மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார். முடிவில் சத்துணவு திட்டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர்,”"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்”- இவ்வாறு காமராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இயக்கத்தின் மையம் வட்டாரம்  . மாவட்டம் என்ற முறையான அமைப்பு முறைக்கு
மாற்றம் பெற்றது. ஒன்றிய அளவில் அமைப்புகள் செயல்படும்  என்ற உடன்
இயக்க ◌செயல்பாடுகள் வேகம் பெற்றது.

தமிழக அரசால் தொடக்கக் கல்விகள் திறந்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அரசிற்கு நிதி ஏதும் கட்டணமாக அளித்திட தேவையில்லை. இன்னும், சொல்லப்போனால் பள்ளிக்கூடம் திறப்பதற்காக யாரும் எந்த அதிகாரியையும் தேடியும் கூட போக வேண்டாம். 

அதிகாரிகளே ஊர் ஊராக சென்றனர். எங்கெல்லாம 300-500 பேர் வாழும் சிற்றூர்கள் உண்டோ அங்கே அதிகாரிகளே சென்றனர். ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு கல்வி வருமாறும் பார்த்துக் கொண்டனர். இந்த இரண்டு அடிப்படைகளைக் கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. ஊரில் இருந்த மக்களிடத்தில் கல்வி மேம்பாடு எடுத்து சொல்லப்பட்டது. ஒரு கட்டிடத்தை வாடகை இன்றி பள்ளிக்கூடத்திற்காக தரமக்கள் ஊக்குவிக்கப்பட்டு, பள்ளிக் கட்டிடங்கள் வாடகை இன்றி பெறப்பட்டு, அங்கே பள்ளிக்கூடம் தொடங்கி வைக்கப்பட்டது.

உடன் வரும் ஆசிரியர்களில் அந்தச் சிற்றூர் பள்ளி ஆசிரியரும் அங்கேயே அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பள்ளிக்குரிய கரும்பலகைகள், மேசை நாற்காலிகள், பதிவேடுகள் முதலியவையும் அதே நேரத்தில் வழங்கப்பட்டது. பள்ளி செயல்படுவதற்குரிய வகையில் முறைப்படுத்தப்பட்டவுடன், அந்தக் குழு அடுத்த சிற்றூரை நோக்கி செல்லும்.
 சென்னை சட்டமன்ற உறுப்பினரும். மாகாணக் கல்வித்துறைக்கு என்றும் உறுதுணையாக விளங்கிச் செயல்பட். உண்மையான பொதுநல உணர்வும் இயற்கையான கல்வி நாட்டமும் கொண்ட இராமசுப்பு, சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆசிரியர்களையும் கல்வி அலுவலர்களையும் தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, பள்ளி இல்லாத ஊர்களைத் தேடித் தேடிச் சென்றார்.

தடமில்லாத புஞ்சைக் காடுகளின் ஊடே பயணம் செய்தார். மற்றோர் ஜீப்பில் கரும்பலகைகள், மேசை நாற்காலி கள் பதிவேடுகள் ஆகியவை வந்தன.

சென்ற ஊர்ப் பெரியவர்களைப பிடித்து, ஏதாவதொரு, கட்டடத்தை வாடகை இன்றி பெற்று, அங்கே பள்ளியைத் தொடங்கி வைத்தார்.

ஊரார், மாவட்ட ஆட்சிக்குழு அலுவலகத்திற்குப் பலமுறை நடையாய், நடந்து அலுப்பதற்குப் பதில், ஆட்சிக் குழுத் லைவரே ஊர்களைத் தேடிச் சென்று பள்ளிகளைத் தொடங்கியதால், கலவித்துறை இயங்குதல் பணி எளிதாக இருந்தது, அலுவலக்க் கோப்புகள் படிப்பதும் காலதாமதம் ஏற்படுவதும் நீக்கப்பட்டன.
இதனால் கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள் முதவியவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு அளித்தார்கள். பல இடங்களில் பள்ளிக்கூடங் கட்டடங்களை விரிவுபடுத்திப் புதியதாக அறைகளை அமைக்கவும் மக்கள் தயாராக முன்வந்தனர. இந்த அனுபவத்தின் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான பொருள்கள் முதலியவற்றை நன்கொட்யாக அளிதார்கள்.அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக காமராசரால் மாறியது.
இதற்கிடையில் 1960-61 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியில் 6லிருந்து 11 வயது வரையிலான குழுந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த மாற்றங்களால் ஒன்றியங்களில் நு◌ாற்றுடகண்க்கான ஆசிரியர்கள்
நியமனம் செய்யப்ட்டனர். புதிய ஆசிரியர்கள் முற்போக்கு எண்ணங்கள் 
கொண்ட  இளைஞர்களால் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் பலமும் பலமடங்காக
பெருகியது.
1960 அடோபர்  2ல் 365 ஊராட்சி ஒன்றியங்களாகப்பிரிக்கப்பட்டு 
புதிய நிர்வாகமுறைக்கு கீழ்  தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டன.


Tuesday, 5 February 2013


வரலாறு 8     முதல் ஊதியக்குழு
1960 ல் முதல் ஊதிய  ஆணைக்குழு அமைக்கப்பட்டது .அது அரசு ஊழியர்களின்
ஊதிய விகிதங்களை மட்டுமே மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது.
இதைக்கண்ட நமது இயக்கம். 1960 ஜனவரியில் கடலுரில் 4 வது மாநாட்டை 
நடத்தியது.பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் திரண்டனர். அதுவரை அந்நகரம்
கண்டிராத மாபெரும் ஊர்வலம் .அதைக்கண்ட அன்றைய கல்வி அமைச்சர் 
சி.சுப்பிரமணியம் மேடையிலேயே ஆசிரியர்கள் ஊதியத்தை முதல் 
ஊதியக்குழு பரிசிலனை செய்து புதிய ஊதியத்தை அறிவிக்கும் என்று அறிவித்தார்
அக்கூட்டத்தில் இராமையத்தேவரின் தலைமை உரை இத்தகைய அறிவிப்புக்கு
காரணமாக அமைந்தது.

கல்வித்துறை சார் பணியாளர்களுக்கு அப்போதெல்லாம் அங்கீகாரம் பெற்ற 
தனிச்சங்கம் இல்லை .அங்கீகாரம் பெறாததால் அச்சங்கம் என்.ஜி.ஓ யூனியனுடன்
 இணைப்புச்சங்கமாக செயல்பட்டது,  நமது இயக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 
அதிகம் . என்.ஜி.ஓ. வில் கீழ்நிலை எழுத்தர்  பின்னர் இளநிலை எழுத்தர் என்றும் பெயர் மாற்றப்பட்ட பணியாளர்கள் எண்ணிகை அதிகம்.
இதில் எழுத்தர்கள் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெற்றவர்கள் 
ஆசிரியர்கள் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெற்று இரண்டாண்டு பட்டயப்படிப்பு 
படித்தவர்கள் .

1960க்கு முன் இளநிலை எழுத்தருக்கு அடிப்படை ஊதியம்  ரூ 45/-
இடைநிலை ஆசிரியர்களுக்கு             அடிப்படை ஊதியம்  ரூ 40/-
தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு    அடிப்படை ஊதியம்  ரூ 37/-
நியாய அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் 2 ஆண்டு பட்டய படிப்புக்கு 
கூடுதல் ஊதியம் தரவேண்டும். ஆனால் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது.
முதல் ஊதியக்குழுவில் இந்த பிரச்சணையை இயக்கம் முன்நிறுத்தி அறிகை தந்து
வாதிட்டது.  அதேப்போல் ஒவ்வோர் நிர்வாகத்திலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும். வெவ்வேறு ஊதிய விகிதம் இருப்பதை மாற்றி ஒரேகல்வித் 
தகுதிஉடைய ஆசிரியர்களுக்கு ஒத்த ஊதியம் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியது.
இந்த இரண்டு கருத்தாலும் என்.ஜி.ஓ யுனியன் முரண்பட்டு நின்றது. பழைய நிலையே இருக்க வேண்டும் என்பது அவர்களின் நிலையாகும்.
ஆனால் இயக்கத்தின் வாதத்தை ஊதிய ஆணைக்குழு நியாம் என்று ஏற்றுகொண்டது

வரலாறு 6

தொடக்கக்கவியில் ◌வெள்ளை அறிக்கை              கல்வியில் சென்னை மாநில அரசு சார்பில் வெள்ளை அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது .                                                      1.ஆசிரியர்மாணவர் விகித்ம் .1/20 என்பதை 1/40 ஆக மாற்றியது இது சரக அளவில் மொத்த அளவில் கணக்கிடப்பட்டது.                                

 

2.இளநிலை ஆசிரியர் பணியிடத்தில்  இடைநிலை ஆசிரியரை நியமித்து இடைநிலை ஆசிரியர் ஊதியம் தருவது நிறுத்தப்பட்டது.

 

3. ஒவ்வொரு தொடக்கப்பள்ளிக்கும்  5 ஆம் வகுப்புக்கு ஆங்கிலம் கற்பிக்க   இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.

*  ஆசிரியர் மாணவர் விகிதாச்சார நடைமுறையால் 20000 ஆசிரியர் பணியிடம்              குறைப்பு செய்யப்பட இருந்தது.

*இளநிலை ஆசிரியர் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவது நிறுத்தப்பட்டதன் மூலம் 17000 ஆசிரியர்களுக்கு ஊதியகுறைப்பு ஏற்பட்டது.

*ஆங்கிலம் கற்பிக்க   இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 26000 இளநிலை ஆசிரியர்களுக்கு பணி இழப்பு ஏற்பட இருந்தது.

மேற்கண்ட மூன்று பிரச்சனைகளைபயும் இயக்கம் எதிர்கொண்டு கடுமையாக போராட முடிவு செய்தது.

மாநிலத்  துணைத் தலைவர் திரு இராமசாமி ரெட்டியார் தலைமையில்  சேலத்தில்இருந்து சென்னை நோக்கி மிதிவண்டி பேரணிநடத்தினர். இதன் மூலம் ஆசிரியர்கள்  இடைய எழுற்சி ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் நாகையில் இருந்து மாநிலத்தலைவர் திரு. இராமையாதேவர் தலைமையில் ஓர்  மிதிவண்டி பேரணி தென் ஆர்காடு மாவட்டம்  வழியே வந்த போது நுற்றக்கணக்கான ஆசிரயர்கள் பேரணியில் இணைந்து கொண்டனர். இப்படியாக தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் இருந்து ஒரு பேரணியும் . தென் கிழக்கு பகுதில் இருந்து ஒரு பேரணியும் சென்னையை நோக்கி இரட்டைக்குழல் துக்பாக்கி போல் வந்தது. சென்னை நோக்கி வந்த மிதிவண்டி பேரணிகள் ஒன்று கூடி சென்னை மாநகரில் போர் பரணி பாடி வந்தன.

அரசியல் கட்சிகள் காட்டாத உணர்வையும் கூட்டத்தையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்று நடத்திக்காட்டி அரசை பணியவைத்தது.
அதன்படி

1. ஆசிரியர் மாணவர் விகிதம் மொத்த அளவில் கணக்கிடப்படாமல் புதிதாக ஆசிரியர் பணியிடம் ஏற்படும் வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இதனால் இழப்பு வராது என்பதற்காக அரசாணை 250 வெளியிடப்பட்டது.

2.             1.4.58 க்கு முன் இளநிலை பணியிடத்தில் பணியாற்றி இடைநிலை ஆசிரியர்கள் 

எந்த வகுப்பில்  இருந்தாலும் அவர்களுக்கு ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

3.     ஆங்கிலம் கற்பிக்க இடைநிலை ஆசிரியர் நியமனம் பெறுவதன் மூலம் 

       ஏற்படும் உபரி இளநிலை ஆசிரியர் பணியிடம் கூடுதல்பணியிடமாக கணக்கிடப்பட்டு பணியிடங்கள் இழப்பு தவிற்கப்பட்டது.