Sunday, 24 February 2019














































தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின்  பொதுக்குழு கூட்டம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வட்டார தலைவர் என்றி பவுல் ராஜ் அவர்கள் தலைமை ஏற்றார்.  முன்னிலை  அருன்பிரகாஷ்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்  . மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன்  மாவட்ட துனைத்தலைவி மரியசாந்தி   ஆகியோர் முன்நிலை வகித்தனர்.  தானைத்தலைவர் கிருஷ்ணாஜி அவர்கள்  அக்கால போராட்ட முறைகள் பற்றி கூறினார்.  மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அவர்கள் போராட்டம் பற்றியும் போராட்டத்தின் தன்மை பற்றியும்  காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் வீரம்பற்றியும்  எல்லை காக்கும் வீரர்களின் அர்பணிப்பு  அவர்களின் தியாகம் பற்றியும் கூறினார். 
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டன
*     ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர அனுமதி அளித்த நமது கல்விதுறை அமைச்சர் அவர்களுக்கும்  அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேப்போல் அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
*     ஆசிரியர்கள் பணியில் மீண்டும் சேர மாநில அமைப்பு எடுத்த தொடர் நிகழ்வுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 *    மேநாள் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் சிறை சென்ற  ஆசிரிய பெருமக்களுக்கும்  பாராட்டு விழா மாவட்ட கிளை அமைப்பு எடுத்த முடிவின் படி ஒவ்வொருவரும் 500 ரூபாய் அளிக்க ஒப்புதல் பெறப்பட்டது.
* தானைத்தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையின் தொடர் பணிகளை மேற்கொள்ளவும் .  படிக்கட்டுவரை சிமிட் தளம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.
* தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு வின் செயல் பாடுகளை தொடர்ந்து செய்யவும் அதற்கான நடவடிக்க்க்கும்  ஒப்புதல் பெறப்பட்டது.
*   ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு  மே 10 ஆம் தேதி அன்று பாரட்டுவிழா நடத்துவதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது.
*        மார்ச் 8  நடுநிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் 20 பேரும் அவர்களுடைய தாயும் , சேர்ந்து கிருஷ்ணகிரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்நத இடங்களை  சுற்றிகாட்ட முடிவு செய்யப்பட்டது.
*       ஏப்ரல் மாதம் முதல் மாதத்தில் சர்வதேச மகளீர் தின கொண்டாப்படும் என்றும் அதற்கான குழு விரைவில் அறிவித்து அதற்கான பணியை அக்குழு மேற் கொள்ளும் எனவும்.

பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலை  அருகே  உயில் நீத்த இந்திய வீரர்களுக்கு  மலர் அஞ்சலியும் .  மெழுகுவர்த்தி எற்றியும் தங்களின் வருத்தத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொண்டனர்.

முடிவில் பொருளாளர் அனுராதா நன்றி கூறினார்
கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டேவீஸ் , ரோஸ்லின்மேரி  , தவச்செல்வி . மற்றும்  துனை பொருப்பாளர்கள் இசபெல்லாராணி . அனிதா . பிரியதர்னி  மேநாள் மாவட்டதலைவர் ரங்கப்பன் , இரகுமான் . ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment