Saturday, 13 April 2013

 

அந்த 18 நாட்கள் 

1972  இயக்கத்தின் வரலாற்று பங்கங்களில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்படவேண்டிய 
ஆண்டாகும் .  
ஆசிரியர்களின் இயக்க வரலாற்றில்  முதன் முதலில் நமது இயக்க சிங்கங்கள் சிறை சென்றதும்ம.
1020  பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்டு செய்யப்பட்டதும் அப்போதுதான் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் கூட்டணியின் மாநில ,மாவட்ட ,கிளைப்பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஆகியோர் 
18 நாட்கள்  சிறையில் இருந்ததும் அந்த ஆண்டுதான்.

 பாரதப்போர்  நடைபெற்றதும் 18 நாட்கள் தன்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய குருசேத்திரப்போரும் 18 நாட்கள் தான்.

பழனிப் பொதுக்குழு முடிவுபடி  மறியல் நடத்த முடிவு

  கல்வி எழுர்ச்சி நாள் கோரிகைகள் குறித்து கல்வி அமைச்சர் அவர்கள் வாக்குறுதி தந்தபடி 
அறிவிப்புகளை வெளியிடவில்லை எனில்  மாநில செயற்குழு மறியல் ◌செய்ய வேண்டும் 
என்பது தீர்மாணம்.  


1.   போராட்டத்தின் தொடக்கம்  
சிறப்பு மிக்க தீர்மாணம்
     பொதுச்செயலர் பொறுப்பில் இருந்த துணைச்செயலர் பொதுக்குழுவைக்கூட்டிணார்.
எப்ரல் 29ல் அமைச்சர் கோரிகைகளை ஏற்று அறிவிப்பு வெளியிடாவிட்டால் 
என்ன செய்வது .  என்ற கேள்வி பவாதுக்குழுவில் வைக்கப்பட்டது. இதற்கு கோரிக்கைகளை 
பெற்றுத்தர செயற்குழு பொறுப்பேற்கும் என்ற பதில் தரப்பட்டது. அப்படி சொல்லக்கூடாது
அறிகை வெளியிடப்பட வில்லை எனில் 30ம் தேதி மாநில செயற்குழு  அமைச்சர் 
மறியல் செய்து சிறைசெல்ல தயாரா என்ற கேள்வி வைக்கப்பட்டது.இதை செயற்குழு உறுதி செய்தது
அமைச்சர் வீட்டு முன் மறியல் நடத்தப்படும். பங்கு பெறாத மாநில செயற்குழு உறுப்பினர்கள் 
அடிப்படை உறுபபினர் பதவியை இழப்பர் என்ற சிறப்பு மிக்க தீர்மாணத்தை அறிவித்தது.
 
 
போராட்டக்குழு மற்றும் அமைப்பாளராக தருமபுரி மாவட்ட செயலர் பெ.கந்தசாமி  சிறப்பாக 
செயல்பட்டார் அவருக்கு துணையாக ஆண்டிப்பட்டி திரு  இராமலிங்கம் , தென்னார்காடு மாவட்டத்தின்
செல்லமுத்து இரா  பானு,ம.க.முத்துசாமி  ,சாமிநாதன் ஆகியோர் உடன் இணைந்து பணியாற்றினர்
 
போராட்ட நிகழ்வுகள் சட்டமன்ற உறுப்பினர்  அறை என் 5 ல் இருந்து மாஸ்டர் ,ஜே.எஸ்.ஆர் மற்றும் 
முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டனர். 
தகவல்கள் அனைத்தும் தந்தி முலம் 29.4.1972ல் கொடுக்கப்பட்டது.
 
 
 
    அந்த போராட்டத்தின் முதல்நாள் 30.4.1972  மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் 
19 பேர் அன்றைய மாநில தலைவராக இருந்த  பெரியவர்  ஆரணி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மறியலில்
ஈடுபட  19 பேர் கிளம்பினர்.
ஏன் அந்த 19 பேர் என்றால் 1947ல் நடைபெற்ற வேலைநிருத்த போராட்டத்துக்கு மாஸ்டர் 
மங்களுருவில் இருந்து 19 பேருடன் சென்னை வந்ததை நினைவு கூறும் வகையில் 19பேர் கலந்து
கொண்டார்கள்.
 
அமைச்சரின் வீட்டை அடைவதற்கு முன்னதாகவே  தடுத்து நிறுத்தப்பட்டார்கள் . கவல் துறையினர்
மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று தடுக்க  பொறுப்பாளர்கள் நாங்கள் செல்வோம் என்று 
முன்னேரி  வலுவாக முன்னேரிச்செல்ல காவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தள்ளு முள்ளு
ஏற்பட்டது. ஆசிரியர்கள்  முழக்கங்களை வலுவாக எழுப்பி மேலும் முன்னேற முயன்ற போது
சென்னை துனை கமிஷனர் ஆணைப்படி கைதுசெய்யப்பட்டனர் 19 பேரும்.
 
   அன்றைய தினம் குடியரசுதலைவர்  வி.வி.கிரி அவர்கள் சென்னை வந்திருந்தார் அவர் கிரீன் வேஸ்
சாலை வழியாக செல்வதால் காவல் துறைக்கு ஏகப்பட்ட   பாதுகாப்பு பணி  இதற்கிடையில் 
ஆசிரியர்களை ஒரு வேணில் ஏற்றி  பொதுச்செயலர் முத்துசாமியிடம் காவர் துறை கல்வி 
அமைச்சர் ஊரில் இல்லை திங்கள் அன்னறு வந்திடுவார்  அன்று அமைச்சர் அவர்களை 
உங்களிடம் பேசிட ஏற்பாடு செய்கிறே◌ாம்இப்போது நீங்கள் சென்று விடுங்கள் என்று 
வேண்டினர்.  ஆனால் மாஸ்டர் அதை ஏற்கவில்லை   பின் வேன் கமிஷனர் அலுவலகம் சென்றது
மாலை 5 மணி கைது செய்யப்பட்ட அணைவரும் அழைக்கப்பட்டோம்.
கமிஷனர் முன் நிறுத்தப்பட்டோம். கமிஷனர்  அமைச்சரை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் 
பிரச்சணையை பேசி தீர்த்துகொள்ளுங்கள்.
  மாஸ்டர் உடனே நாங்கள் முன்பே அமைச்சரிடம் இதுபற்றி பேசிவிட்டோம் அமைச்சர்தான் 
தான் சொன்னபடி நடக்கவில்லை  முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று 
கூறி சென்றவர் குறித்த நாளில் அறிவிப்பு வராததால் நாங்கள் பொதுக்குழுவின் முடிவுகள் 
படி  நாங்கள் மறியல் செய்ய சென்றோம் என கூறினார்.
மாலையில் வீட்டுக்கு செல்வதை எவரும் விரும்பவில்லை ஏன் எனில் தீர்வு கிடைக்காது .
முடிவில் கமிஷனர் 15 நாள் ரீமாண்டு செய்தார்.
 


மத்திய சிறைச்சாலை - சென்னை சிறை 

வேன் சென்னை மத்திய சிறைக்கு சென்றது  அங்கு ஆசிரியர்களிடம்  இருந்த வாட்ச் , மோதிரம், 
காயிதங்கள் , இதரப்பொருட்கள் , கடைசியில் அறைஞான் கயிறு அத்தனையும் பெற்றுகொண்டு 
உள்ளே சட்டை பணியன்  ,டிராயர் ,வேட்டியுடன்  அனுப்பினர்.
சிறைக்காவலர்  அனைவரையும் 2 ஆவது குவாரன்டீனுக்கு அழைத்துச்சென்றார்.
அவைகள் அரசியல் கட்சியைச்செர்ந்தவர்களை அடைக்கப்பயன்பட்டது.கீழ் பகுதியில் நான்கும்  மேலே நான்கும் 
ஆக எட்டு அறைளைகொண்டிடுந்தது.
.
ஆசிரியர்கள் நலனுக்காக முதன் முதலில் சிறைக்கு சென்றதை பெருமையாக கருதினர்
ஆளுகொரு அலுமணியத்தட்டும  அலுமணிய குவளையும் அளிக்கப்பட்டது.
படுத்துகொள்ள ஆளுகொரு துணி விரிப்பு தந்தார்கள் . இரவு கோதுமைக்களி , சிறிது அரிசி சாதம்
கொடுக்கப்பட்டது. அதன் பின் 2 மண்சட்டிகள் கொடுத்தார்கள் . ஒன்று குடிநீர் வைப்பதற்க்கும்
ஒன்று இரவில் சீறுநீர் கழீப்பதர்க்கும். பின் அனைவரும் கம்பிகளுக்கு பின் அடைக்கப்பட்டனர்
யாரும் கம்பியை எண்ணவில்லை . தம் கோரிகைகளையே எண்ணிபார்த்து உவகை அடைந்தனர்








No comments:

Post a Comment